search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு"

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 17-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. #18MLAs #MLAsDisqualification
    சென்னை:

    கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அன்றைய கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.முக. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அவரைத்தவிர கவர்னரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3-வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், தற்போது சட்டசபைக்கு தன்னந்தனியாக வந்துபோகும் டி.டி.வி. தினகரனின் கை ஓங்கும். இந்த 18 பேர் தவிர வேறு சில எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 110 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முழு மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எனவே, தினகரனுக்கு ஆதரவு அதிகரித்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.


    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தினகரன் முதல்- அமைச்சர் பதவியை குறி வைக்கலாம். தன்னை முதல்-அமைச்சராக ஆக்கினால் ஆட்சியை காப்பாற்றுவேன் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    ஆட்சியை காப்பாற்ற விரும்பினால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு பணிந்து போக நேரிடலாம். இல்லையென்றால் ஆட்சி கலையும். அதன் பிறகு தேர்தலை சந்தித்து ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனவே தேர்தலை சந்திக்க இன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே 20 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.

    இதில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா? என்பதில் எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தி.மு.க.வும் களம் இறங்கும் போது மும்முனை போட்டி ஏற்படும். எனவே ஆளும் கட்சி நிலை என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாது. எனவே இடைத்தேர்தல் முடிவும் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    தி.மு.க.வுக்கு தற்போது சட்டசபையில் 88 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அந்த கட்சி பொதுத் தேர்தலை சந்திப்பதையே விரும்புகிறது.

    இன்றைய சூழ்நிலையில் 18 எம்.எல்.எ.க்கள் வழக்கில் அவர்களை நீக்கியது சரி என்று தீர்ப்பு வந்தாலும், நீக்கியது தவறு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது. புயல் கடுமையாக வீசுமா? எளிதில் கரை யேறுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  #18MLAs #MLAsDisqualification
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #18MLAs
    கோவை:

    ஊட்டியில் அரசு பஸ் பள்ளத்தில் உருண்டு 9 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் அரசு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதி அறிவித்துள்ளது. சுனாமி, இயற்கை சீற்றம், போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ. 20 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    அதே போல் ஊட்டி பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாக பல மாதங்கள் ஆகும் என்பதால் அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

    ஊட்டி மலை பாதை அதிக வளைவு, நெளிவுகளை கொண்டது. எனவே அங்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும். ஊட்டியில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அங்கு மல்டி ஸ்பெ‌ஷல் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

    தற்போது அங்கு மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையில் மல்டி ஸ்பெ‌ஷல் மருத்துவமனை அமைக்கலாம். இல்லாவிட்டால் ஊட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    ஜனாதிபதி நிராகரித்து விட்ட நிலையில் அரசியல் ரீதியாக எந்த முயற்சியும் செய்ய முடியாது. கோர்ட்டு மூலம் தான் நிவாரணம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

    ராஜீவ் கொலையாளிகள் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    அவர்கள் விடுதலையை நம்பி இருந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் வருத்தத்தில் அவ்வாறு சொல்லி இருக்கலாம். இது ஏற்புடைய கருத்து அல்ல.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் இரு விதமான தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பதவியில் உள்ளார்களா? இல்லையா? என்பதில் பிரச்சனை உள்ளது.

    நீதி திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது. தற்போது 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டு உள்ளது. காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே 8 மாதம் ஆகி விட்டது. இப்பிரச்சனை 18 எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தொகுதி மக்கள் பிரச்சனை.

    ஒரு தொகுதிக்கு சுமார் 2 லட்சம் மக்கள் இருந்தாலும் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 45 லட்சம் மக்களின் பிரச்சனை ஆகும். மேலும் அரசுக்கு ஸ்திரதன்மை உள்ளதா? என்பது இந்த தீர்ப்பில் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், கணேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், நிர்வாகிகள் உமாபதி, சவுந்திர குமார், கணபதி சிவகுமார், துளசி ராஜ், கேபிள் வினோத், காமராஜ்துல்லா, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Congress #Thirunavukkarasar #18MLAs
    தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAs
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது. எனவே, வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக இன்னும் சில காலம் ஆகும்.

    இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்,  சபாநாயகர் உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார். தனது தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து, அதன்மூலம் பொதுமக்களும் பயன் அடைவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

    இது தங்க தமிழ்ச் செல்வனின் தனிப்பட்ட விருப்பம் என்றும், மற்ற 17 எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்): தங்கதமிழ்ச்செல்வன் முடிவுக்கு டி.டி.வி. தினகரன் என்ன கருத்து கூறியிருக்கிறாரோ அதுதான் எனது கருத்து. புதுச்சேரி சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும் இருப்பது நீதித்துறை மாண்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்களது பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்): தகுதி நீக்கம் தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த வழக்கில் புதுவைக்கு ஒரு விதமாகவும், தமிழகத்துக்கு ஒரு விதமாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

    புதுவையில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்கி றார்கள். தமிழகத்தில் செல் லாது என்கிறார்கள். கட்சியில் பொதுச்செயலாளர் பதவி குறித்த விவரம் தேர்தல் ஆணையம் நிலையில் இருக்கும்போது நாங்கள் யார்பக்கம் இருப்பது என்பது எங்களது உரிமை.

    தமிழக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எங்கள் மீதான வழக்கை மேலும் காலதாமதம் செய்யவே இந்த நடவடிக்கை. இதன் மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்துவிட்டது.

    பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி): சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ்பெற தங்கதமிழ்செல்வன் முடிவு எடுத்திருப்பது குறித்து அவர் அளித்த பேட்டியை டி.வி.யில் பார்த்தேன்.

    இதுதொடர்பாக அவரிடமும், எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனிடமும் இன்னும் பேசவில்லை. அவர்களிடம் பேசிய பிறகு இதுபற்றிய கருத்தை தெரிவிப்பேன். என்றாலும் எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவோம். எல்லா எம்.எல்.ஏ.க்களையும் கலந்து பேசிதான் அவர் முடிவு எடுப்பார்.

    பாலசுப்பிரமணி (ஆம்பூர்): எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சம்மந்தமாக நான் தனியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமை நடவடிக்கை எடுக்கும் டி.டி.வி.தினகரன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து.

    ஆர்.ஆர். முருகன் (அரூர்):  சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்கதமிழ்ச்செல்வன் முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவாகும். நான் ராஜினாமா செய்யமாட்டேன். மக்கள் நீதிமன்றத்தை நம்புவது போல நானும் நீதிமன்றத்தை நம்புகிறேன்.

    எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டப்படி போராடி வெற்றி பெறுவோம். எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்): தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. 18 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் கூறினோம். கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.

    18 எம்.எல்.ஏ.க்களும் ஆளுங்கட்சி அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறோம். எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கட்டும் அதற்கு பிறகு முடிவு செய்வோம். கட்சியில் அடிப்படை உறுப்பினராகவும் வைத்திருக்கிறார்கள் கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் நாடகம்.

    டி.டி.வி.தினகரன் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. சில நேரங்களில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். இது ஒட்டுமொத்த 18 எம்.எல்.ஏ.க்கள் கருத்தாக ஏற்கமுடியாது.

    நீதிதுறை மேல் நம்பிக்கை உள்ளது. கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 18 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். #18MLAs
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புடன் பா.ஜ.க.வை தொடர்பு படுத்தி பேசுவதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பா.ஜனதாவின் 4 ஆண்டு சாதனை மிகவும் மகத்தானது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகாவினர் பிரதிநிதிகள் குழு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் வாயை திறக்கவில்லை?

    காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறிதான் குமாரசாமி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவருக்கு தான் இங்குள்ளவர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

    மத்திய அரசு திட்டங்களில் முக்கியமானது கருப்பு பணம் ஒழிப்பு. ஏகப்பட்ட கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னொரு மகத்தான சாதனை ஆதார் இணைப்பு திட்டம். சாதாரண மக்களுக்கு கூட மானிய தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறி உள்ளனர். இதற்கும் பா.ஜனதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

    ஆனால் இதற்கும் பாரதிய ஜனதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதாவை குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? நீதிபதிகள் தீர்ப்பு கூறியதற்கு பா.ஜனதாவை குறை சொல்வது ஏன்?

    நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என என்னிடம் கேட்பது தவறு. அவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை மாநில அரசிடம் கேளுங்கள்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். #BJP #VanathiSrinivasan

    ×